Pages

Subscribe Twitter Twitter

Thursday, January 19, 2012









SOPA.. நாம்.. கட்டற்ற இணையம்.


சில நாட்களாக ஊடகங்களில் பலமாக அடிபடும் சொற்கள் தான் SOPA(Stop Online Piracy Act), PIPA(PROTECTIP Act). .அமெரிக்காவிலும் ஏனைய பாகங்களிலும் இணையத்தளம் மூலம் இடம்பெறும் காப்புரிமை மீறல்களை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க செனற்றில் நிறைவேற்ற முயலும் இரு சட்ட மூலங்கள் தான் இவை..

இந்தச் சட்டங்கள் என்ன தான் செய்யப்போகின்றன? உதாரணமாக இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் வெளிவந்து திரையரங்குகளில் வந்தவுடனேயே ஏன் சிலசமயங்களில் வரமுதலே இணையத்தளங்களில் இலவசமாக தரவிறக்கக் கூடியதாக செய்துவிடுகிறார்கள் அல்லவா..அதேபோல் பாடல்கள் மற்றும் இசைத்தொகுப்புகளின் நிலையும் இதே தான்.இதனையெல்லாம் தடுப்பது தான் இந்தச் சட்டங்களின் வெளிப்படையான நோக்கம்.

உதாரணமாக
  •  youtube ல் நாளந்தம் பார்த்து ரசிக்கும்  பாடல்கள், நகைச்சுவைகள்..
  •  வெளியான உடனேயே தரவிறக்கி கேட்டுவிடத்துடிக்கும் எம்மைப் போன்ற விசிறிகள்..
  •  மொழிகடந்து இலவசமாகவே Torrent உதவியுடன் தரவிறக்கி பார்த்துவிடும் பல்வேறு மொழிப் படங்கள்..
  • இலவசமாகவே தரவிறக்கிவிடும் e புத்தகங்கள்.. 

இங்கே தான் பிரச்சினை எழுகின்றது... 

இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலமான கோசங்கள் உலகெங்கும் எழ ஆரம்பித்துள்ளது. காப்புரிமையப் பேணுவது அவசியமானது என்ற அடிப்படையில் இதற்கு ஆதரவானவர்களும்,இது இறுதியில் கட்டற்ற இணையத்தைக் கட்டுப்படுத்தி சுதந்திர கருத்துரிமையை மீறுவதிலே தான் முடியும் என இத்ற்கு எதிரானவர்களின் வாதங்களும் எழ ஆரம்பித்துள்ளன.இது Wikipedia போன்ற பல இலட்சம் பார்வையாளர்களை நாளொன்றிற்குக் கொண்டுள்ள இணையத்தளாங்களின் ஒருநாள் Blackout (ஒரு வகையிலான கடையடைப்பு ;-) ) போராட்டம் வரை இதுவரை சென்றுள்ளது.

பல கோடிகளோ இலட்சங்களோ செலவுசெய்து மேலும் காப்புரிமை பெற்று தயாரிக்கப்படும் திரைப்படங்களோ இசைத்தொகுப்புக்களோ ஏனைய அம்சங்களோ சட்டவிரோ தமான முறையில் இணையத்தளங்களில் தர வேற்றப்படுவதால் அதனை வெளியிடும் நிறுவனங்களிற்கு பெருமளவு வருமான இழப்பு ஏற்படுகிறது .. இது அடிப்படையில் அந்த துறை(Industry)யையே படிப்படியாகப் பாதிக்கச் செய்கிறது.தொடர்ந்து அந்த துறையையே ஆட்டங்காணச் செய்கையில் அந்தத் துறையயே நம்பி வாழும் அன்றாடங்காய்ச்சிகளின் அடிவயிற்றில் இறுதியாகக் கைவைக்கின்றது.ஆகவே இதனைத் தடுத்தேயாக வேண்டும் என இதனை ஆதரிப்பவர்கள் வாதாடுகிறார்கள்.

ஆனால் சட்டங்கள் போட்டுத் தடுப்பதனால் எதுவும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. தொழிநுட்பங்களில் கைதேர்ந்தவர்களாலேயே இதுபோன்ற தளங்கள் நடாத்தப்படுவதால் அவர்கள் வேறுவழிகளில் இதனைக் கொண்டு செல்வார்கள். ஆனால் அடிப்படையில் பாதிக்கப்படப் போவது என்னவோ இது போன்ற காப்புரிமைபெறப்பட்ட பொருட்களைக் கட்டனங்செலுத்திப் பெறமுடியாதவர்களே எனவும் வாதாடுகிறார்கள். குறிப்பாக எல்ல நாட்டுச் சந்தைகளுக்கும் எல்லாப் பொருளும் எளிதில் வந்தடைவதில்லையெனவும், அவ்வாறான பிரதேசங்களில் வாழ்பவர்களையே இது பாதிக்கும் எனவும் வாதாடுகின்றார்கள். மாறாக இந்தச் சட்டமூலங்கள் புத்தாக்கங்களில் ஈடுபடும் சிறிய நிறுவனங்களை சட்டங்களிலுள்ள ஓட்டைகளப் பயன்படுத்தி பெரிய நிறுவனங்கள் அடிமைப்படுத்திவிடவே ஊக்குவிக்கும் எனவும் வாதாடுகிறார்கள்.

சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்க திட்டம் போட்டுத் திருடிற கூட்டம் திருடிக்கொண்டேயிருக்கும் என்பது இவர்களது  வாதம்.இதற்கு மாறாக சட்டங்களை இயற்ற செலவு செய்யும் நேரத்தையும் பணத்தையும் இவ்வாறன செயற்பாடுகளைத் தடுக்கப் புதிய தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் செலவுசெய்வதே சிறந்தது என்கிறார்கள் இந்தச் சட்டமூலத்தை எதிர்ப்பவர்கள்.

எது எவ்வாறானாலும் இந்தச் சல்லமூலம் நிறவேற்றப்படுமா, அல்லது பல்வேறு மற்றங்களிற்கு உட்பட்டு நிறைவேற்றப்படுமா, நிறவேற்றப்பட்டாலும் எவ்வாறு அமுல்படுத்தப்படப் போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தச் சட்டமூலங்கள் பற்றி நான் அண்மைய நாட்களில் இணையத்தில் வாசித்த ஆக்கங்களின் அடிப்படையில் மேலெழுந்தவாரியாகவே இங்கு விளக்கியிருக்கிறேன்.மேலும் படிக்க கீழுள்ள இணைப்புக்களைச் சொடுக்குங்கள்.



Tuesday, January 3, 2012









நான்.. விவாதம்.. TinTin..


அது.. முகமூடி மாயாவி எங்கள் கல்லூரி வகுப்பறைகளில் பிரபலமாயிருந்த காலம்..நாமெல்லாம் சுழற்சி முறையில் நம்மிடையே இருந்த ராணி காமிக்ஸ்களை ஒருவர் மாறி ஒருவர் பகிர்ந்து வாசித்துக் கொண்டிருந்தோம்..இதனை ஒரு வகையான பண்டமாற்று என்றே கூறலாம்.. 
சில காமிக்ஸ்கள் சுழற்சி முறையில் நம்மை வந்தடைய வாரக் கணக்கில்கூட காத்திருக்க வேண்டி இருக்கும்.இப்படி நம்ம பசங்களெள்லாம் முகமூடி மாயவி மீது வெறிகொண்டலைந்தபோது திடீரென மாணவ முதல்வர்கள் இதனை வாசிக்கக்கூடாதெனக் கூறி பெருமளவு புத்தகங்களை நண்பர்களிடமிருந்து அள்ளிச் சென்றது இப்போதும் ஞாபகம் இருக்கிறது.. ஏன்  வாசிக்கக் கூடாதெனக்கூறினார்கள் என்பதை இன்றுவரை குப்புறப் படுத்திருந்து யோசித்துப்பார்த்தாலும் எந்தக் காரணமும் புரிகிறதில்லை.பின்னர் சிலகாலம் அதனை மறைத்து வைத்து இரகசியமாக வாசித்து வந்தாலும் பழைய வெறித்தனம்.. நாட்டம் அதில் தொடரவில்லை..



பின்னர்..  எமது கல்லுரியில் விவாதம் கொடிகட்டிப்பறந்த காலம்..குமாரசுவாமி மண்டபத்தில் முன்னால் நிலத்தி உட்கார்ந்தபடி அனல் பறக்கும் விவாதங்களிற்கு கைதட்டி குதூகலித்திருந்தபோது.. நாமளும் விவாதத்தில் இறங்கினால் என்ன என ஒரு விபரீதமான நப்பாசை பிறந்தது. (எவண்டா அது பாடம் கடத்த காயாளும் உபாயங்களில் ஒன்றாகவே இவற்றிலெல்லாம்  நமக்கு நாட்டம் வந்தது எண்டு அரசாங்க ரகசியங்களைப் போட்டு உடைப்பது..). ஒரு வழியாய் முட்டிமோதி நம்மளையும் விவாத அணியிலே நம்மளையும் நம்பி இறக்கிவிட்டர்கள்.


நாமளும் ஒரு மாதிரி சமுதாய நலன் அது இதென்று விவாதங்களில் ஏதோ புகுந்து கலக்கிய/கலாய்த்துக்கொண்டிருந்தபோதுதான் நிகழ்ந்தது அந்தவிபரீதம்.ஒரு நாள் இலக்கியத் தலையங்கம்.. நமக்குத்தான் பாடப்புத்தகத்திலுள்ள தமிழ் இலக்கியம் தெரிகிறதே பெரிய விசயம்..  என்ன செய்வதென்றே தெரியவில்லை. நம்ம அணியிலே முதலில் பேசிற இரண்டு பேருமே இலக்கியம் தெரிந்தவங்கள் எண்டதால ஏதோ நமக்குத் தெரிந்த கோயில்களில் சிறுவயதில் பிரசங்கங்களில் கேட்டதெல்லாம் சேர்த்து.. அதோட எப்பவும் குறைகண்டு பிடிக்கிறதில வல்லவன் எண்டிறதாலயோ என்னமோ மூண்டாவதாய் என்னை இறக்கிறவங்கள்.. ஆக எதிரணியிலே அளவுக்கதிகமாகக் குறைகண்டுபிடித்தும், ஒரு மாதிரி எனக்கு தமிழ் இலக்கியமெல்லாம் தெரியாதெண்டிற இரகசியம் வெளியில தெரியாமல் சமாளித்து ஒருமாதிரி வென்றுவிட்டோம்..ஆனா நம்ம நடுவப் பெருந்தகை  இலக்கியக்கருத்துகளுக்கு அப்பால் வெட்டியாடி ஒரு மாதிரி வென்றுவிட்டீங்கள் என்று நம்ம குட்டை தனிப்பட்ட ரீதியில் உரையாடும் போது போட்டு உடைத்துவிட்டார்..இதனால் வீறுகொண்டெழிந்த நாம் தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடிப்பதென்று முடிவெடுத்து நம்ம கல்லூரி நூலகத்தைத் துழைத்தெடுக்க ஆரம்பித்தோம். சிவகாமியின் சபதம், கடல்புறா என்று நம்மட இலக்கியப்பயணம்(?) சென்றுகொண்டிருக்கையில்தான் எமது நூலகத்திற்கு எதோ வெளிநாட்டுப் பழையமாணவர் சங்கத்தின் அன்பளிப்பு என்று பெருந்தொகையான ஆங்கிலப் புத்தகங்கள் வந்து சேர்ந்தது.

நாம தான் ஆங்கிலக் கதைப்புத்தகங்களின்ர பக்கமே தலை வைச்சுப் படுக்கிறதேயில்லையே..ஆனாலும் நம்ம பசங்க சிலபேர் கலர்கலராய் படங்களோட நம்ம முகமூடி மாயாவி போல புத்தகம் வாசிக்கிறத கண்டபோது ஆர்வமேலீட்டால் வாங்கிப்  படம் பார்த்து..சிறிது சிறிதாய்.. என்ர ஆங்கிலப் புத்தகம் வாசிக்கிறதில்ல எண்டிற சபத்தத்தையே முறியடிக்கச் செய்தது தான் அந்த TinTIn..
சிறிதுகாலம் நம்ம பசங்களை வெறி கொண்டலையச் செய்தது அந்தக் பல வர்ண TinTin புத்தகங்கள்..மழைக்கும் நூலகப்பக்கம் ஒதுங்காத நம்ம பசங்கள் சிலரை நூலக அங்கத்துவம் பெறச்செய்யும் அளவிற்கு நீண்டிருந்தது இந்த TinTIn வெறி.இந்தப் புத்தகங்களை எடுப்பதற்கு பலரும் முண்டையடிக்கவே ..இறுதியாக சுழற்சிமுறையிலே இந்த புத்தகங்கள் வெளியில் செல்ல்லாமல் வாசிப்பதாக முடிவெடுத்து செயலில் இறங்கினோம். அதிலும் சில குழறுபடிகள் ஏற்படவே TinTIn சில புத்தகங்களை எடுத்து வேறுஅலுமாரிகளில் யாரும் எடுத்துவிடாதவாறு ஒழித்துவைக்கத் தீர்மானித்தோம்.இதற்காக நாம் தெரிவுசெய்தது தமிழ் இலக்கியப் புத்தகங்கள் வைக்கும் அலுமாரியைத்தான்.. இப்போது நினைத்தாலும் இந்தச் சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகள் சிரிப்பைத்தான் வரச் செய்கிறது..

பின்னர் செங்கையாழியான், சுஜாதா என எமது ரசனை திரும்பிவிட்டது. அந்த ரசனை இப்போது இணையத்தில் ஏதாவது வாசித்தால் சரி அது தவிர எந்த புத்தகத்தையுமே வாசிப்பதில்லை என ஒடுங்கிவிட்டது.

TinTin வருகையோடு நான் கடற்புறா நாவலை இறுதிப் பாகத்தை வாசிக்காமலே விட்டுவிட்டேன் என்பது ஞாபகத்திற்கு வருகிறது..வாசிக்க வேண்டும் என்று தோன்றினாலும் அநேகமாக கதை மறந்தே போய்விட்டதால் முதலில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.. ஆனால் என் இயல்பான சோம்பலைக் கடந்து நானாவது அந்த புத்தகத்தையெல்லாம் தேடியெடுத்து எல்லாப் பாகத்தையும் வாசிப்பதாவது என என் உள்மனம் சிரிக்கிறது. அநேகமாக என் உள்மனம் ஜெயித்துவிடும் போலத்தான் எனக்கும் தோன்றுகின்றது. ;-)


Tuesday, September 13, 2011









புதிய கைத்தொலைபேசியோ, மடிக் கணனியோ வாங்க வேண்டுமா..??கவலையை விடுங்கள்..

புதியதொரு கையடக்கத் தொலைபேசியோ, மடிக் கணனியோ, புகைப்படக் கருவியோ வாங்கியபின்னர் உடனடியகவே அறிமுகமாகும் புதிய மொடெலாலோ அல்லது நாம் பெருந்தொகை பணத்தைக் கொடுத்து வாங்கியவுடன் அந்தப் பொருளின் சந்தை விலையில் சடுதியாக ஏற்படும் வீழ்ச்சியாலோ கடுமையாகப் பாதிக்கப்பட்டவரா நீங்கள்..??கவலையை விடுங்கள்.

அண்மையில் உங்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதை நோக்காகக் கொண்ட Decide.com என்ற தளமொன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.. குறித்த இலத்திரனியல் பொருளை நீங்கள் வாங்கலாமா இல்லை புதிய அறிமுகத்திற்காகக் காத்திருத்தல் உசிதமானதா..விலையிலேற்படக்கூடிய மாற்றங்களிற்கான எதிர்வு கூறல்கள் என உங்களிற்கு ஆலோசனை வழங்கக் கூடியவாறு இந்தத் தளத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் சராசரியாக ஆறு புதிய மடிக்கணனி வகைகள்,ஒரு புதிய வகை புகைப்படக் கருவி ,ஒரு புதிய வகை தொலைக்கட்ட்சியென புத்திது புதிதாக அறிமுமாகிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் நுகர்வோரிற்கு இந்தத் தளம் பெருந்துணையாக இருக்கும்.ஆனால் இத் தளம் பிரபலமானால் இவர்களது விலை எதிர்வு கூறல்கள் பொருட்களின் விலையை, நிரம்பலை செயற்கையாக நிர்ணயிக்கக்கூடிய துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்திவிடும் என விமர்சிப்பவர்களும் உள்ளார்கள்
.
எது எவ்வாறானாலும்  புதிய மொடல்களின் அறிமுகம் பற்றிப் பெரிதாக உடனடியாகத் தெரிந்து கொள்ள முடியாதவர்கள், புதியதொரு இலத்திரனியல் உபகரணத்தினை வாங்கமுற்படுகையில் இந்தத் தளத்தினது எதிர்வுகூறலையும் ஒரு முறை கவனித்துத் தங்கள் தீர்மானங்களை மேற்கொள்வதன் மூலம் ஏற்படக் கூடிய ஏமாற்றத்தினைத் தவிர்த்துக்கொள்ளலாம்..

மேலதிக விரிவான விபரங்களிற்கு இங்கே சொடுக்குங்கள்
tech crunch பதிவிற்கு.. 


Saturday, August 20, 2011









இலங்கை அணி.. கவனஞ் செலுத்த வேண்டியவை..


 இன்று இடம்பெற்ற தொடரைத் தீர்மானிக்கும் முக்கிய கிறிக்கெற் போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவி இந்திய அணிக்கு தாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என நிரூபித்து இந்திய அணி விசிறிகளை சீண்டிய எங்களைப் போன்றவர்களிற்கு எல்லாம் மரண அடி வாங்கித் தந்துள்ளது. அடுத்த போட்டியிலாவது இலங்கை அணி வென்று மீண்டு எங்களைப் போன்றவர்களை பழையபடி சீண்டிப்பார்க்கும் போமிற்கு திரும்பச் செய்யுமோ என் நாமே குப்புறப் படுத்துச் சிந்தித்திருந்த வேளையில் கிறிக்கெற் பதிவெழுதாத நீயெல்லாம் ஒரு பதிவரா என நண்பனொருவன் வெந்த புண்ணில் வேல் பாச்சிவிட்டான்.


இலங்கை அணிக்கு ஆலோசனைகளை வழங்கி அணியை அடுத்த போட்டியிலாவது வெல்லச் செய்ய எதற்கும் சளைக்காமல் இலங்கை அணிக்காக வாதாடும் அமரேசைத் தொடர்பு கொள்வோமென்று பார்த்தால் அவர் தொடர்பு வலையமைப்புக்கு இப்பாலோ அப்பாலோ சென்றுவிட்டதால் ..இதோ நானே களத்தில் இறங்கி விட்டேன். இதோ எனது ஆலோசனைகள்.

இலங்கை அணி துடுப்பாட்டத்தில் ஓட்டங்களைக் குவிக்க முடியாமல் இப்போதெல்லாம் தடுமாறுவதால் இன்னும் இரண்டு துடுப்பாட்ட வீரர்களை அணியிலிருந்து தூக்கிவிட்டு பந்துவீச்சாளர்கள் இருவரை அணியில் இணைக்கலாம்.தொடரை ஏற்கனவே இழந்து விட்டதால் அடுத்த போட்டியில் உலகில் மிக நீண்ட வால் (அது தாங்க tail end) கொண்ட அணியென்ற கிண்ணஸ் சாதனையை இலக்கு வைத்து பத்துப் பந்து வீச்சாளர்களும் ஒரு விக்கெட் காப்பாளருமாக ஒரு அணியைத் தெரிவு செய்யலாம். முடிந்தால் இந்திய அணித் தலைவர் டோணி போலப் பகுதி நேரமாகப் பந்து வீசக்கூடிய விக்கெட் காப்பாளர் ஒருவரை இணைப்பது அணிக்கு மேலும் வலுச் சேர்த்து சாதனையை மேலும் வலுவாக்கும்.

எத்தனை முழுநேரப் பந்து வீச்சாளர்கள் அணியிலிருந்தாலும் பகுதி நேரப் பந்து வீச்சாளர்களைக் கொண்டு தான் ஆரம்ப பந்துப் பரிமாற்றங்களை வீசி முடிக்கவேண்டும். முடிந்தால் லசித் மலிங்கவிற்கு ஓவரே கொடுக்காமல் அதனையும் பகுதி நேரப் பந்து வீச்சாளர்களைக் கொண்டு வீசி முடிக்கச் செய்யலாம்.

எப்போதோ ஒரு உலகக் கிண்ணத் தொடரில் சில ஐம்பதுகளை அடித்ததோடு மட்டுமல்லாமல் அணி தோற்கும் போதெல்லாம் ஐம்பது அடித்து சாதனை படைக்கும் இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சாமர சில்வாவை தலைவராக நியமித்துப் அணியைத் தூக்கி நிறுத்துவதோடு மைந்தன் சிவா போன்ற விமர்சகர்களிற்குத் தகுந்த பதிலடி கொடுக்கலாம். அதுவும் அவரைத் துடுப்பாட்ட வீரராகவே கணிக்க முடியாது எனக் கருத்துக் கூறும் கன்கோன் போன்றவர்களை 4 துடுப்பாளர்+5 பந்து வீச்சாளர் + அணித்தலைவர் எனக் கருத்துக் கூறச் செய்யலாம். 

எல்லாவற்றிற்கும் மேலாக ”சுழற்றக் காத்திருக்கும் இலங்கை ” எனப் போட்டி தொடங்க முதலே ஆரூடம் கூறி எவ்வளவு அடி வாங்கினாலும் சளைக்காத எங்கள் விக்கிரமாதித்தன் லோசன் அண்ணாவின் வலைப்பூவை இலங்கை தொடர்பான போட்டித் தொடர்கள் ஆரம்பிக்க முதலே ஏதாவது தொழினுட்ப முறைகளைக் கையாண்டு உத்தியோகப்பற்றற்ற முறையிலே முடக்க வேண்டும். 

7 தடவை துடுப்பாட்டப் போட்டியைப் பார்க்கப் போய் சகல தடவையும் இலங்கை அணியைத் தோற்கடிக்கச் செய்த அஷ்வின் போன்றவர்களையெல்லாம் ஏதாவது தடைச்சட்டத்தில் தூக்கி உள்ளே போட்டு அடுத்த போட்டிக்கு மைதானப் பக்கமே வரவிடாமல் செய்து இலங்கையின் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். 

யாரது..?? எனது பாதுகாப்பை உறுதிப்படுத்தச் சொல்லி மகஜர் தாயாரிப்பது..!!
பி.கு: யாவும் கலப்படமற்ற கற்பனை










அமெரிக்கா.. கருத்து.. மாற்றுக் கருத்து..



உண்மையிலேயே நாமெல்லாம் எமக்கு அருகில், எம்மைச் சூழ எம்மையெல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கின்ற விடயங்களைப் பற்றியெல்லாம் அடிப்படையிலிருந்து அறிந்து வைத்திருக்கின்றோமா என்பதில் எனக்கு நீண்டகாலமாகவே ஒரு சந்தேகம்.

 முதலில் இந்த வீடியோவை ஒரு முறை பாருங்கள்.அவர்களது விடைகளையும் கருத்துக்களையும் அவதானமாகக் கவனியுங்கள்..


சிரிப்பை அடக்கமுடியாதவர்கள் நன்றாகவே சிரித்துவிட்டு விடயத்திற்கு வாருங்கள்.


எங்களில் பலரும் இப்படியானவர்களாக இருப்பது மறுக்க முடியாத உண்மையே.
Facebook ல் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க முற்பட்டுத் தங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுபவர்கள் பலரை நீங்கள் கண்டிருப்பீர்கள்.  இந்த வீடியோவை பார்த்ததிலிருந்து எங்கள் நண்பர் குழுவிடையே வழமை போலவே ஆரம்பித்த விவாதமொன்று நீண்டு ..வழமை போலவே முடிவேதும் இல்லாமல் முடிவடைந்துவிட்டது.

அந்த விவாதத்தின் அடிப்படைச் சந்தேகங்கள் இது தான்..

  • எதற்கெடுத்தாலும் தங்கள் கருத்தைக் குறிப்பிடுபவர்கள் இருக்கிறார்களே. அவர்கள் எத்தனை சதவீதமானவர்கள் விடயத்தின் ஆழத்தை புரிந்து  கருத்துத் தெரிவிக்கிறார்கள்..? ?
  • உண்மையிலேயே எல்லா விடயத்திலும் ஒருவனிற்கு சொந்தக் கருத்து இருக்க வேண்டுமா..?? சில விடயங்களில்  தனக்கென சொந்தக்கருத்தெதுவும் இல்லாமல் இருப்பதில் தவறேதுமிருக்கிறதா..?? 
  • மாற்றுக் கருத்து..மாற்றுக் கருத்து என்கிறார்களே.. அப்படி மாற்றுக் கருத்துக் கூறுபவர்களில் ஏறக்குறைய சகலருமே ஏன் எல்லாக்கருத்துக்குமே மாற்றுக் கருத்துக் கூறுகிறார்கள்..?? 
  • எது கருத்து ..??எது மாற்றுக்கருத்து..?? அநேகமானவர்கள் தெரிவிப்பதற்கு மாறாகத் தெரிவிப்பது தானா மாற்றுக்கருத்து..?? ;-)


யாரது..??இப்பவே கண்ணைக் கட்டுதே என்பது..
 சரி சரி .. பிழைத்துப் போங்கள்.